Skip to main content

சின்ன கிறுக்கல்கள்


கவிப்புயல் இனியவன்
கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல்
கவிப்புயல் இனியவன்
அந்தரங்க கட்டிலுக்கு
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
மத
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல்
காகித
கப்பலை பார்த்தபின்...
தான் உண்மை கப்பலை...
பார்க்கிறோம் -ஆரம்பம்....
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
அருமை

நன்றி நன்றி
    கவிப்புயல் இனியவன்
    காதலை கேட்டேன் ...
    கண்ணீரை தந்தாள் ....
    அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
    ஆண்டவனை பார்க்க ....
    மனமுருகித்தானே ....
    வேண்டினார்கள்....!!!

    &
    கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
    கவிப்புயல் இனியவன்
      கவிப்புயல் இனியவன்
      கரு சிதைவை காட்டிலும் ....
      எண்ண சிதைவே கொடூரமானது ....
      வளர்ந்த மனிதனையே ....
      கொல்கிறது.....!!!

      &
      கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
      கே இனியவன்
        கவிப்புயல் இனியவன்
        நேற்றைய பிரச்சனைகளை....
        நேற்றே மறந்திடுங்கள்....
        நாளைய பிரச்சனைகளை....
        இன்றே மறந்திடுங்கள்....
        இன்றைய பிரச்சனைக்கு ....
        இன்றே தீர்வு காணுங்கள்......!
        கே இனியவன்
          கவிப்புயல் இனியவன்
          எல்லோரும்...
          ஒருவரில் அன்பாய்...
          இருக்கிறார்கள்....
          என்றால்...
          அவர் எல்லோரிடமும்....
          அன்பாய் இருக்கிறார்...!
          கே இனியவன்
            கவிப்புயல் இனியவன்
            இன்று....
            நீ எடுத்து வைக்கும்....
            ஒவ்வொரு அடியிலும்....
            முற்கள் போல் ஆபத்துக்களும்...
            பூக்கள் போல் இன்பமும் ....
            காத்திருக்கிறது.....!
            இவை உன் செயலால்...
            வருவதில்லை....
            உன் எண்ணத்தால் வரும்....
            எண்ணமே செயலாகும்....!
              கவிப்புயல் இனியவன்
              பகலை சுமையாக்கி
              இரவை கண்ணீராக்கினால்
              காதல் தோற்றுவிட்டது

              &
              கவிஞனின் சின்ன கிறுக்கல்
              கே இனியவன்
                கவிப்புயல் இனியவன்
                இன்று என்னை
                ........பிரிந்தாலும்..!
                மறந்தாலும்..!!
                .......என்றாவது நீ
                என்னை நினைக்கும்....
                ..... நாள் நிச்சயம் வரும்
                அப்போது நான் உன்னில் ...
                .....கண்ணீராக இருப்பேன் ....!!!
                &
                கவிஞனின் சின்ன கிறுக்கல்
                கே இனியவன்
                  கவிப்புயல் இனியவன்
                  நீ
                  வெறுக்கும் அளவுக்கு
                  அசிங்கமானவன்
                  நீ
                  ஒதுக்கும் அளவுக்கு
                  ஒன்றும் இல்லாதவன்
                  நீ
                  நினைக்கும் அளவுக்கு
                  ஒழுக்கமில்லாதவன்
                  நீ
                  எதற்காக என்னை
                  காதலிக்கிறாய் ..?

                  காதல் செய் பதில் ...
                  வருமென்றாள்.....!!!

                  &
                  கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                  கவிப்புயல் இனியவன்
                    கவிப்புயல் இனியவன்
                    உன் நினைவு
                    எப்போதெல்லாம்
                    வருகிறதோ ....
                    அப்போதெல்லாம்....
                    என்னை வலிமையாக்கி ...
                    வரிகளாக்கிவிடுவேன் ...
                    வரிகளுக்கு தான்
                    வேதனை புரியும் .....!!!

                    &
                    கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                    கவிப்புயல் இனியவன்

                      கவிப்புயல் இனியவன்
                      மனதில் உள்ள வலியை ....
                      வார்த்தையாய் சொல்லமுன் ....
                      கண் முந்திக்கொள்கிறது ...
                      கண்ணீர் வடிவில் ....!!!

                      &
                      கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                      கவிப்புயல் இனியவன்
                        கவிப்புயல் இனியவன்
                        வாளால்
                        வெட்டும் கொடுமையை ....
                        காட்டிலும் கொடுமையானது ....
                        வாயால் கொட்டும் ....
                        வார்த்தைகள் .....!!!

                        &
                        கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                        கவிப்புயல் இனியவன்
                          கவிப்புயல் இனியவன்
                          மெல்ல மெல்ல ....
                          கிறுக்கினேன் வரிகள் ....
                          வந்தது - உன்னை ...
                          காதலித்தேன் -கவிதை ...
                          வந்தது .....!!!

                          &
                          கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                          கவிப்புயல் இனியவன்
                            கவிப்புயல் இனியவன்
                            என் ....
                            சின்ன கவிதை...
                            உன் சின்ன சின்ன ...
                            செல்லசண்டையால் ....
                            வருகிறது....
                            நிறுத்தி விடாதே ...
                            செல்லகுறும்பு ....
                            சண்டையை ....!!!

                            &
                            கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                            கவிப்புயல் இனியவன்
                              கவிப்புயல் இனியவன்
                              சுவாசிக்கும் மூச்சாய் -நீ
                              பேசும் பேச்சாய் -நீ
                              சிரிக்கும் சிரிப்பாய் -நீ
                              காணும் கனவாய்-நீ
                              விடும் கண்ணீர்- நீ
                              இத்தனையும் -நீயாக
                              அத்தனையும் -நானாக
                              காதல் எப்படி நீவேறு ...
                              நான் வேறாகியது ....?

                              &
                              கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                              கவிப்புயல் இனியவன்
                                கவிப்புயல் இனியவன்
                                உன்னை
                                பார்க்க மாட்டேன்...
                                என்று கண் மூடியது ....
                                பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
                                அவள் உன்னை விட்டு ....
                                விலகப்போகிறாள்....
                                சீக்கரம் பார் என்று ....
                                கண்ணை சுறண்டுது ....
                                இதயம் ...!!!

                                &
                                சின்ன கிறுக்கல்கள்
                                கவிப்புயல் இனியவன்

                                  கவிப்புயல் இனியவன்
                                  உன்னை....
                                  தெரியாதவர்களுக்கு ......
                                  நீ கொடுப்பது .......
                                  நினைவு பரிசு ..
                                  உன்னை புரிந்த எனக்கு ....
                                  உன் நினைவே பரிசு...
                                  &
                                  சின்ன கிறுக்கல்கள்
                                  கவிப்புயல் இனியவன்
                                    கவிப்புயல் இனியவன்
                                    உன்னை .....
                                    பிரிய சொல்கிறாயே .....
                                    என்னையா ......?
                                    உயிரையா ........?

                                    உன்னை பிரிய .....
                                    நொடிபோதும்.......
                                    உன் நினைவுகளை .....
                                    பிரிய எத்தனை .....
                                    ஜென்மமும் போதாது ....!!!

                                    &
                                    சின்ன கிறுக்கல்கள்
                                    கவிப்புயல் இனியவன்
                                      கவிப்புயல் இனியவன்
                                      உன்னை ....
                                      சிற்பமாக ....
                                      செதுக்கியுள்ளேன் .....
                                      இதயத்தில் .....
                                      உளி கொண்டு அல்ல.....
                                      என் விழி கொண்டு ....!!!

                                      டிக் டிக் டிக் ..
                                      துடிக்க மட்டும் தெரிந்த
                                      என் இதயத்திற்கு,-இப்போ
                                      திக் திக் திக் என்று ....
                                      தவிக்கவும் கற்றுத் தந்தது
                                      உன் அன்பு...!!!

                                      &
                                      சின்ன கிறுக்கல்கள்
                                      கவிப்புயல் இனியவன்
                                      கவிப்புயல் இனியவன்

                                      reply Reply to topic

                                      Prev.

                                      Page 2 of 2

                                      கவிப்புயல் இனியவன்
                                      First topic message reminder :

                                      கவிதையோடு வாழ்பவனும்
                                      கவிதையாக வாழ்பவனுமே
                                      கவிஞன்

                                      &
                                      கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
                                      கவிப்புயல் இனியவன்

                                        ஸ்ரீராம்
                                        @கவிப்புயல் இனியவன் wrote:
                                        உன்னை ....
                                        சிற்பமாக ....
                                        செதுக்கியுள்ளேன் .....
                                        இதயத்தில் .....
                                        உளி கொண்டு அல்ல.....
                                        என் விழி கொண்டு ....!!!

                                        டிக் டிக் டிக் ..
                                        துடிக்க மட்டும் தெரிந்த
                                        என் இதயத்திற்கு,-இப்போ
                                        திக் திக் திக் என்று ....
                                        தவிக்கவும் கற்றுத் தந்தது
                                        உன் அன்பு...!!!

                                        &
                                        சின்ன கிறுக்கல்கள்
                                        கவிப்புயல் இனியவன்

                                        சூப்பர் அண்ணா
                                          கவிப்புயல் இனியவன்
                                          @ஸ்ரீராம் wrote:
                                          @கவிப்புயல் இனியவன் wrote:
                                          உன்னை ....
                                          சிற்பமாக ....
                                          செதுக்கியுள்ளேன் .....
                                          இதயத்தில் .....
                                          உளி கொண்டு அல்ல.....
                                          என் விழி கொண்டு ....!!!

                                          டிக் டிக் டிக் ..
                                          துடிக்க மட்டும் தெரிந்த
                                          என் இதயத்திற்கு,-இப்போ
                                          திக் திக் திக் என்று ....
                                          தவிக்கவும் கற்றுத் தந்தது
                                          உன் அன்பு...!!!

                                          &
                                          சின்ன கிறுக்கல்கள்
                                          கவிப்புயல் இனியவன்

                                          சூப்பர் அண்ணா

                                          நன்றி நன்றி
                                            கவிப்புயல் இனியவன்
                                            நீ .....
                                            அருகில் இருந்தால் ...
                                            நீதந்த வலி கூட .......
                                            தெரியவில்லை ......!!!

                                            நீ அருகில் ....
                                            இல்லாததால்.....
                                            இதயத்தின் துடிப்பு
                                            கூடவலிக்கிறது ...!!!!

                                            &
                                            சின்ன கிறுக்கல்கள்
                                            கவிப்புயல் இனியவன்
                                              கவிப்புயல் இனியவன்
                                              நீ
                                              பேசுவது எனக்காக ...
                                              நீ
                                              சிரிப்பது எனக்காக ...
                                              நீ
                                              அழுவது எனக்காக ....
                                              ஏன்
                                              தெரியுமா நான்.. ..
                                              வாழ்வது உனக்காக..!!!

                                              &
                                              சின்ன கிறுக்கல்கள்
                                              கவிப்புயல் இனியவன்
                                                கவிப்புயல் இனியவன்
                                                உனக்கு
                                                காதல் சின்னமாய்.......
                                                தாஜ்மஹால் கட்டிவிட்டு....
                                                உன் நினைவோடு.....
                                                எகிப்து பிரமிட்டுக்குள்.....
                                                அழியாத நினைவுகளுடன்....
                                                சடலமாய் வாழ்கிறேன்......!!!

                                                &
                                                கவிப்புயல் இனியவன்
                                                சின்ன கிறுக்கல்கள்
                                                  கவிப்புயல் இனியவன்
                                                  நாம் .......
                                                  காதலில் இரு.....
                                                  பிரதான ஒளி ............
                                                  நான் பகலில் சூரியன்.....
                                                  நீ இரவில் சந்திரன்........
                                                  அதனால் தானே இன்னும்.....
                                                  இணையாமல் இருகிறோம்........
                                                  வெட்டவெளியில் ஒற்றைமரம்....
                                                  தனித்து வேதனைபடுவது போல்.....
                                                  நம் காதல் தவிக்கிறது........!!!

                                                  &
                                                  கவிப்புயல் இனியவன்
                                                  சின்ன கிறுக்கல்கள்
                                                    கவிப்புயல் இனியவன்
                                                    உன்னோடு வாழ்ந்தவன்
                                                    இப்போ உன் நினைவோடு
                                                    மட்டுமே வாழ்கிறேன் ........!

                                                    உன்னை நேரே ..............
                                                    காதலிக்க முடியாது.............
                                                    கவிதையால்................
                                                    காதலிக்கிறேன் .................!

                                                    &
                                                    கவிப்புயல் இனியவன்
                                                      கவிப்புயல் இனியவன்
                                                      சாதாரண ..............
                                                      கண்ணுக்கும் ................
                                                      காதல் கண்ணுக்கும் ..................
                                                      வித்தியாசம் ...............
                                                      கண்டு பிடிக்காதவன் ..............
                                                      முட்டாள் .................!
                                                      துடிக்காத இதயமும் ...............
                                                      காதல் இல்லாத இதயமும்..........
                                                      ஒன்றுதான்...............
                                                      இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?
                                                      &
                                                      கவிப்புயல் இனியவன்
                                                        கவிப்புயல் இனியவன்
                                                        காதல் பிரமிட்
                                                        ----------------------
                                                        நீ..............................................01
                                                        நான்.......................................02
                                                        காதல்.....................................03
                                                        கற்பனை...............................04
                                                        நினைவுகள்...........................05
                                                        வாக்கு வாதம்........................06
                                                        காதலுக்கு வலி......................07
                                                        காதல் பிரிவு..........................06
                                                        முரண்பாடு............................05
                                                        விலகல்....................................04
                                                        சோகம்.....................................03
                                                        வலி...........................................02
                                                        போ...........................................01

                                                        &
                                                        கவிப்புயல் இனியவன்
                                                          கவிப்புயல் இனியவன்
                                                          எதற்காக என்னை ....
                                                          காதல் செய்ய தூண்டினாய் ...?

                                                          எதற்காக என்னை உனக்காய் ...
                                                          ஏங்க வைத்தாய் .....?

                                                          எதற்காக என் நிம்மதியை ....
                                                          தொலைத்தாய் .....?

                                                          எதற்காக என்னை பிரிந்தாய் ...?

                                                          எதற்காக உன் வலியையும் ....
                                                          நான் சுமக்கிறேன் ....?

                                                          இதற்கெல்லாம் காரணம் ...
                                                          காதல் என்றால் அதுவும் ....
                                                          எதற்காக என்றே தெரியவில்லை ...?

                                                          ^^^^^
                                                          காதல் தோல்வி கவிதைகள்
                                                          ------------
                                                          மறுத்தால் மன்னித்துவிடுவேன்
                                                          மறந்தால் மரினித்து விடுவேன்
                                                          ------------
                                                          கவிப்புயல் இனியவன்
                                                            கவிப்புயல் இனியவன்
                                                            கண்ணால் பேசி....
                                                            காலமெல்லாம் ....
                                                            காத்திருக்கவைக்க ....
                                                            என்னவளால் தான் ....
                                                            முடியும் .....!

                                                            சில ......
                                                            நொடிதான் பார்த்தாள்....
                                                            பல நொடிகள் பதறவைத்தாள்....
                                                            சிதறி விட்டது இதயம் ....!

                                                            ^^^
                                                            கவிப்புயல் இனியவன்
                                                              கவிப்புயல் இனியவன்
                                                              அனைத்தையும் காதல் செய்கிறேன்
                                                              ----------------------------------------------

                                                              கோபப்படாமல் இருப்பதற்கு....!
                                                              வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!

                                                              பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
                                                              மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!

                                                              உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
                                                              அமைதியோடு வாழ்வதற்கு...!

                                                              மகிழ்வோடு வாழ்வதற்கு...!
                                                              உழைத்து கொண்டே இருப்பதற்கு...!

                                                              அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
                                                              தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!

                                                              எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
                                                              வாழ்வோமாக.......................!
                                                              காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!

                                                              ^^^
                                                              கவிப்புயல் இனியவன்
                                                              அனைத்தையும் காதல் செய்கிறேன்
                                                                கவிப்புயல் இனியவன்
                                                                சின்ன சின்ன காதல் வரிகள்
                                                                --------------

                                                                என்ன கொடுமை
                                                                பார்த்தாயா ......?
                                                                உனக்குள் நானும் ....
                                                                எனக்குள் நீயும் ....
                                                                இருந்துகொண்டு .......
                                                                பிரிந்து விட்டோம்
                                                                என்கிறோம்........!

                                                                ^^^

                                                                நான் உயிரோடு ...
                                                                இறக்க விரும்புகிறேன் ...
                                                                தயவு செய்து என்னை ....
                                                                காதலித்து விடு ....!

                                                                ^^^

                                                                கண்ணில் காதலாய் ...
                                                                விழுந்தாய் ...
                                                                கண்ணீரால் நனைகிறது ...
                                                                இதயம் ....!

                                                                ^^^

                                                                நீ மறுத்தது ...
                                                                என் காதலை இல்லை ...
                                                                ஊசலாடும் உயிரை ....
                                                                ஒருமுறை நினைத்து பார் ....!

                                                                ^^^

                                                                உன் வரவு என் பிறப்பு ....
                                                                உன் பிரிவு என் இறப்பு ....
                                                                என் நினைவஞ்சலியில்....
                                                                வாசகங்கள் ....!

                                                                ^^^

                                                                கவிப்புயல் இனியவன்
                                                                  கவிப்புயல் இனியவன்
                                                                  நீ ஒருமுறை
                                                                  கண் சிமிட்டினால்
                                                                  ஓராயிரம் கவிதை
                                                                  எழுத்துகிறேன்....!

                                                                  ஒருநொடி ......
                                                                  பேசாது இருந்தால்....
                                                                  ஆயிரம் முறை இறந்து....
                                                                  பிறக்கிறேன் ....!

                                                                  உயிரே மௌனத்தால்
                                                                  கொல்லாதே ...!
                                                                  உன் நினைவால்
                                                                  துடிக்கிறேன்......!

                                                                  ^^^
                                                                  கவிப்புயல் இனியவன்

                                                                    கவிப்புயல் இனியவன்
                                                                    உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
                                                                    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

                                                                    இதயத்தில் குடியிருப்பவளே....
                                                                    மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
                                                                    மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

                                                                    -------------------------------

                                                                    கல்லை செதுக்கினேன் உன் உருவம்
                                                                    கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
                                                                    இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!

                                                                    -------------------------------

                                                                    காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
                                                                    கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
                                                                    இரண்டையும் செய்பவன் ஞானி.....!

                                                                    -------------------------------

                                                                    உலக போதையிலேயே கொடூரம்.......
                                                                    உன் போதை கண் தான் -இன்னும்.......
                                                                    போதையில் இருந்து மீளவில்லை........!

                                                                    -------------------------------

                                                                    சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
                                                                    நீ கண் திறந்தாய் நான் எரிந்தேன்
                                                                    நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?

                                                                    ------------------------------

                                                                    நீ வேறு நான் வேறு இல்லை
                                                                    வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
                                                                    உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

                                                                    ---------------------------------------

                                                                    நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
                                                                    வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
                                                                    இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

                                                                    -------------------------------

                                                                    உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
                                                                    என்னை மறக்கும் இதயம் வேண்டும்
                                                                    மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

                                                                    -------------------------------

                                                                    பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
                                                                    புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
                                                                    காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

                                                                    -------------------------------

                                                                    சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
                                                                    பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
                                                                    பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!

                                                                    ------------------------------

                                                                    நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
                                                                    அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
                                                                    பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!

                                                                    ------------------------------

                                                                    நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
                                                                    நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
                                                                    நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

                                                                    ------------------------------

                                                                    வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
                                                                    &
                                                                    கவிப்புயல் இனியவன்
                                                                      கவிப்புயல் இனியவன்
                                                                      கவிப்புயலின் சிந்தனைகள்

                                                                      ^^^
                                                                      எரித்தால் ஒரு பிடி சாம்பல்
                                                                      பிடித்தால் ஒருபிடி இதயம்
                                                                      இடையில் ஆயிரம் ஆயிரம்
                                                                      சுமைகள் ....!

                                                                      ^^^

                                                                      கூடி இருந்து சிரிக்கும்
                                                                      நண்பனையும் பார் ...!
                                                                      தனியே இருந்து .....
                                                                      அழுதபோது தன் சுட்டு
                                                                      விரலால் துடைத்த
                                                                      நண்பனையும் பார் ...!
                                                                      சிரிக்கும் நண்பர்கள்
                                                                      நிலைப்பதில்லை ....!

                                                                      ^^^

                                                                      பெண்ணின் அழுகை
                                                                      வலிமையானது
                                                                      ஆணின் அழுகை
                                                                      கொடூரமானது
                                                                      ஆண் அழுதால்
                                                                      அந்த குடும்பமே
                                                                      அழும் ....!

                                                                      ^^^

                                                                      தெளிவான அறிவோடு பேசுங்கள்........
                                                                      இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
                                                                      இருங்கள்.........!

                                                                      ^^^

                                                                      கவிப்புயல் இனியவன
                                                                      கவிப்புயல் இனியவன்

                                                                      Comments

                                                                      Popular posts from this blog

                                                                      கவிப்புயலின் முத்தான மூன்று வரி

                                                                      கவிப்புயலின் மூன்று வரிகள்

                                                                      சின்ன சின்ன கவிதைகள்