Skip to main content

சின்ன சின்ன கவிதைகள்

 

கவிப்புயல் இனியவன்
போடா.....
உனக்கு.......
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்
    கவிப்புயல் இனியவன்
    நீ வார்த்தையால் ..
    சொன்னதை நான் ...
    கண்ணீரால் எழுதுகிறேன் ...!

    இரவின் கனவும் ...
    உன் நினைவுகளால் ..
    கண்ணீர் வரவைகிறது ...!

    &
    சின்ன சின்ன கவிதைகள் 09
    கவிப்புயல் இனியவன்
      கவிப்புயல் இனியவன்
      முகப்பருவை பார்த்து ...
      கவலைபடுகிறாய்...
      அது என் நினைவுகளின் ...
      அடையாளம் ....!

      என் இதயம் சுமை ..
      தாங்கி எவ்வளவு ...
      வேண்டுமென்றாலும் ...
      வலியை தா ....!

      &
      சின்ன சின்ன கவிதைகள் 10
      கவிப்புயல் இனியவன்
        கவிப்புயல் இனியவன்
        காதலின் சின்னம்......
        கல்லறையாக இருக்கிறது.....
        கல்லறைக்கு பின்னரும்............
        காலத்தால் நிலைத்திருப்பதால்......!

        நிலையில்லாத உயிருக்கு.......
        நிலையான இடத்தை கொடுப்பது.....
        காதல் காவியங்களே.........!

        &
        சின்ன சின்ன கவிதைகள் 11
        கவிப்புயல் இனியவன்
          கவிப்புயல் இனியவன்
          உன் ......
          கண் சொல்கிறது.....
          என் மேல் உள்ள காதலை.....
          நீ முகம் திருப்பினால்..........
          மறைந்து விடாது காதல்.....!

          நீ
          கண் இமைக்கும் நேரத்தில்....
          நான் காணாமல் போய்.......
          விடுவேனோ என்பதற்காய்......
          நீ படும் வேதனையை என்......
          இதயம் மட்டுமே அறியும்....!
          &
          சின்ன சின்ன கவிதைகள் 12
          கவிப்புயல் இனியவன்
            கவிப்புயல் இனியவன்
            கண்ணை திறந்து கொண்டும்.....
            கண்ணை மூடிக்கொண்டும்.....
            கனவு காணும் அபூர்வ சக்தி.....
            காதலருக்கே உண்டு...............!

            அணைத்து கொண்டு இருப்பது.......
            காதலுக்கு இன்பம்..........
            நினைத்து கொண்டிருப்பது.......
            காதலுக்கு சொர்க்கம்......!

            &
            சின்ன சின்ன கவிதைகள் 13
            கவிப்புயல் இனியவன்
              கவிப்புயல் இனியவன்
              காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
              -----------------------

              கோயிலில்லா ஊரில் ...
              குடியிருக்கலாம் ....
              காதல் இல்லா ஊரில் ...
              குடியிருக்காதீர்கள்...!

              உப்பில்லா பண்டம் ...
              குப்பையிலே ....
              காதல் இல்லா இதயம் ....
              குழியினிலே .....!

              -------

              அதிகாலையில் ....
              காதலோடு துயிலெழுங்கள்....
              அதுவே உன்னத தியானம் ...!

              இரவில் ....
              காதலோடு உறங்குங்கள் ....
              அதுவே உன்னத நிம்மதி ....!

              -------

              எங்கும் ...
              நிறைந்த காதலே ....
              நீ என்னோடு இருக்கிறாய் ....
              என்ற தைரியத்தில்தான் ....
              கவிஞனாக இருக்கிறேன்....!

              நீதிமன்ற கூண்டில் நின்று ....
              சொல்வதெல்லாம் உண்மை....
              உண்மையை தவிர வேறு....
              எதுவுமில்லை -என்று ...
              சொல்வதுபோல் -நானும் ...
              உறுதிமொழி சொல்கிறேன்....!

              ^^^
              கவிப்புயல் இனியவன்
                கவிப்புயல் இனியவன்
                உன் ........
                பார்வைக்கு அஞ்சி ...
                நீ அருகில் வரும்போது ...
                மறு தெருவுக்கு போகிறேன்...!

                ------

                உன்னை நான் நேரில் ...
                ரசிப்பதை விட கவிதையில் ...
                ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!

                ------

                ஒவ்வொருவனுக்கும் ...
                அவனவன் காதல் தான் ...
                ஆயுள் பாசக்கயிறு .....!

                ------

                இதயம் மட்டும் ...
                வெளியில் இருந்திருந்தால் ...
                நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
                என்னை ஏற்றிருப்பாய்....!

                ------

                பெண்ணை பற்றி நான் ....
                கவிதை எழுதியதில்லை ...
                உன்னை பற்றியே கவிதை ...
                எழுதுகிறேன் ....!

                ------

                காதல் அணுக்கவிதைகள்
                கவிப்புயல் இனியவன்
                  கவிப்புயல் இனியவன்
                  உன்னை
                  மறக்க மறதியின் ...
                  உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
                  தயவு செய்து அந்த இடத்தை ....
                  நீ தான் காட்டி விடு ....!

                  ------

                  உன்
                  நினைவுகளின் ....
                  தருகைக்காக ....
                  நீர்க்குமிழிகளை ....
                  பரிசாய் தருகிறேன் ....!

                  ------

                  கடித்து
                  துப்பிய நகம் நான் ....
                  சந்தோஷ படாதே ....
                  மீண்டும் வளர்வேன் ....!

                  ------

                  உலகம் ஒரு வட்டம் ....
                  நீ பிரிந்து சென்றாலும் ...
                  என்னிடம் வருவாய் ....!

                  -----

                  உன் இதய சாவியை ...
                  தந்துவிடு -இனியும் ...
                  என்னால் தாங்க முடியாது ....!

                  -----

                  காதல் அணுக்கவிதைகள் - 02
                  கவிப்புயல் இனியவன்
                    கவிப்புயல் இனியவன்
                    உன் கண்ணீல் மின்சார சக்தி
                    என் இதயத்தில் மின் அதிர்வு
                    ஏன் இப்போ மின் வெட்டு ..?

                    -------
                    நீ தரும் வலியை
                    யாருடன் பரிமாறுவேன்
                    உன்னிடம் கூட சொல்ல
                    முடியாமல் தவிக்கிறேன்

                    ------
                    கவிப்புயல் இனியவன்
                      கவிப்புயல் இனியவன்
                      உன் அருகில் நானிருந்து ..
                      என் மூச்சை நீ வாங்கி ...
                      என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

                      @@@@@

                      உன்னை தவிர எதையும்
                      நினைக்காத ஞான நிலையை
                      என் இதயம் பெறவேண்டும் ....!!!
                      @@@@@
                      என்னில் இருக்கும் கண்ணீர்
                      உனக்கே உரியது -நீயே வலியை
                      தந்து நீயே எடுத்து விடு .....!!!

                      @@@@@

                      நானும் ஒரு இயந்திர மனிதன்
                      உன் நினைவுகளாலும் -உன்
                      இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

                      @@@@@

                      காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்
                      உன் காதல் இல்லாமல் ஓர் நொடி
                      கூட வாழ விரும்பமாடேன் ...!!!

                      @@@@@

                      கவிப்புயல் இனியவன்
                      எஸ் ம் எஸ் கவிதைகள்
                        கவிப்புயல் இனியவன்
                        ஒரு......
                        முறை கண்....
                        சிமிட்டி விடு.....
                        பூக்காமல் இருக்கும்.....
                        ஆண் மரங்கள்.....
                        பூக்கட்டும்.....!

                        கண் ஓரத்தில்....
                        சிறு கண்ணீர் சிந்து....
                        பாலவனத்தில்......
                        நீர் ஊற்று வரட்டும்........!

                        &
                        சின்ன சின்ன காதல் வரி
                        கவிப்புயல் இனியவன்

                        Comments

                        Popular posts from this blog

                        கவிப்புயலின் முத்தான மூன்று வரி

                        கவிப்புயலின் மூன்று வரிகள்