Skip to main content

கவிப்புயலின் காதல், நட்பு , கவிதைகள்

 

நீ காதலா....? நீ நட்பா....? 

---------

இலட்சியங்களை.....
இலக்காக்கும் 
காதல்....!!!
இலட்சியங்களை.....
இயக்க வைக்கும் ...
நட்பு....!!!

கட்டுப்பாடுகளை.....
கண்ணியமாக்கும் ...
காதல்....!!!
கட்டுப்பாடுகளை ...
கற்று தரும் 
நட்பு.....!!!

இதயத்தை....
பறி கொடுப்பது.... 
காதல்...!!! 
இதயத்தையே ....
பரிசளிப்பது.... 
நட்பு...!!!

கஷ்டங்களில்.....
கைகொடுப்பது .... 
காதல்....!!! 
கஷ்டங்களில்
தோள் கொடுப்பது ...
நட்பு....!!!

துயரங்களை 
தூக்கி எறியும்  
காதல்.....!!!
துயரங்களில் ....
பங்கெடுக்கும் ...
நட்பு....!!!

காதலின் வெற்றி..... 
இருவரும் இணைவது 
நட்பின் வெற்றி 
இருவரும் உயர்வது ....!!!

காத்திருக்க வைத்து ...
கனவுகளை தருவது ....
காதல் .....!!!
கவலைப்படும் போது 
காத்திருந்து உதவும் 
நட்பு.....!!! 

எதிர்பால் கவர்ச்சியால் 
வருவது 
காதல் ....!!!
எந்தகவர்ச்சியில்லாமல் 
வருவது 
நட்பு ....!!!

காயம் தரும் காதல்..... 
ஆறுதல் சொல்லும் ....
காயத்தோடு சென்றால் ....
அரவணைத்து கொள்ளும்...
நட்பு .....!!!

பெற்றோரால் ....
ஆசிர்படுத்தப்படுவது ....
காதல்....!!!
பெற்றோரால் ....
ஆதரிக்கப்படுவது 
நட்பு .....!!!
கவிப்புயல் இனியவன்
உறவுகளின் அடைப்புக்குள்
அடங்கி தவிக்கும் துடிக்கும் 
காதல் .....!!!
உறவுகளின் எதிர்ப்பு வந்தால் 
தவுடு பொடியாக்கிவிடும் ...
நட்பு ......!!!

காதலில் தோல்வி வந்தால் ....
காலம் முழுதும் வெந்து ...
துடிக்கும் மனசு ....!!!
நட்பில் தோல்வி வந்தால் ....
காத்து கொண்டிருக்கும் ...
மீண்டும் சேர மனசு ....!!!

காலத்தின் பருவத்தால் ....
காதல் மலரும் ...
கால மாற்றத்தால் காதலும் ....
மாறும்.......!!!
பருவ காலம் இன்றி வருவது ....
நட்பு ....
காலம் மாற்றம் அடைந்தாலும் ....
நட்பு மாற்றம் அடையாது ....!!!

^
காதல், நட்பு , கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன கவிதைகள்

கவிப்புயலின் முத்தான மூன்று வரி

சின்ன கவிதைகள்